நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம்: இதுவரை 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

வேங்கைவையல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடா்பாக 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.  

News image
Updated On :13 ஜனவரி 2023, 5:49 pm IST

வேங்கைவையல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடா்பாக 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.  
இதுகுறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் காவல் வட்டம் வெள்ளனூர் காவல் சரகத்திற்குட்பட்ட வேங்கைவயலில் கடந்த 26 ஆம் தேதி மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் இருந்தது தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. 
 மேற்படி வழக்கில் குற்றவாளியை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 2 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

 மேற்படி சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 36 சாட்சிகளிடமும், பிற சமூகத்தைச் சேர்ந்த 49 சாட்சிகளிடமும் விசாரித்து மேற்படி 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை ஆய்விற்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
 மேலும் எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்வது தொடர்பாக விசாரணையானது உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நேர்மையாகவும் எந்த ஒரு ஒளிவுமறைவுமின்றியும், வெளிப்படைத்தன்மையுடனும், முழு முயற்சியுடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.