அவனியாபுரம் ஜல்லிக்கட்டுயில் வென்றவர்களுக்கு முதல்வர் உருவப் படம் பொறித்த தங்கக் காசு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது.
காலையில் தொடங்கி 11 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற விஜய்க்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் வெற்றிப் பெற்ற ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: நேபாள பயணிகள் விமானம் விபத்து: 68 பேர் உடல்கள் மீட்பு
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஜன.15) காலை 8 மணியளவில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கப்பட்டது.