நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காவலர் குடும்பங்களுடன் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டம்!

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் கொண்டாடினார்.

News image
Updated On :15 ஜனவரி 2023, 1:07 pm IST


சென்னை: சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் கொண்டாடினார்.

தமிழர் திருநாளாம் தை திருநாள், தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

Story image

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கலோ என மகிழ்ச்சி பொங்க மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

பின்னர், கடவுளுக்கு படைத்த பொங்கலை அருகில் இருந்தவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர். 

Story image

தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்மக்கள் வசிக்கும் உலகின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Story image

இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில், காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொண்டாடினார். 

பின்னர், காவலர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுகைளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

Story image

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்க பதிவில், வெளியில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். 

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம் என கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.