டிஜிட்டல் சர்வே ரத்து
பாலமுத்தழகு குழுமம் மற்றும் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா பென்னிகுயிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கேரள அரசு டிஜிட்டல் சர்வேவை ரத்து செய்ய வேண்டும், தமிழக எல்லை பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும், லண்டன் மாநகரில் பென்னிகுயிக்கிற்கு சிலை அமைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் கூறினார். அவருடன் உத்தமபாளையம் அரசு வழக்குறைஞர் பி.எம்.தர்மர், ஆதில் ஆம்ஸ் நிறுவனம் எச்.எம்.ரகுமத்துல்லா, உத்தமுத்து பாசன கால்வாய் சங்க தலைவர் முகமது ராவுத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.