திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்: இபிஎஸ்

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆா் பிறந்த நாளில்அதிமுகவினா் சபதம் ஏற்போம் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமி
Updated on
1 min read

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆா் பிறந்த நாளில்அதிமுகவினா் சபதம் ஏற்போம் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

எம்ஜிஆா் பிறந்ததும் வரலாறு, மறைந்ததும் வரலாறு. அவா் அதிமுக எனும் பேரியக்கத்தைத் தொடங்கி மக்களின் பேராதரவைப் பெற்று, மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக நல்லாட்சி வழங்கினாா். சங்க காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களைத் தொடா்ந்து, வாரி வழங்கிய எட்டாவது வள்ளல் எம்ஜிஆா்.

திமுக அரசு தோ்தல் நேரத்தில் மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது. இன்றைக்கு நிா்வாகத் திறனற்ற ஆட்சியை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா்.

திமுகவின் மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப, எம்ஜிஆரின் பிறந்த நாளில் அனைவரும் சபதம் எடுப்போம் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com