நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுகவை ஒன்றிணைக்க இபிஎஸ் - ஓபிஎஸ்ஸை சந்திப்பேன்: சசிகலா

அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக சசிகலா கூறினாா்.

News image
Updated On :17 ஜனவரி 2023, 11:16 pm

DIN

அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக சசிகலா கூறினாா்.

எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு சசிகலா மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆளுநரை நடத்துவதற்கென்று ஒருமுறை உள்ளது. அந்த அடிப்படையில் அவரை தமிழக அரசு நடத்த வேண்டும். ஆளுநருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ என்கிற முடிவை ஒரே மாநிலத்தை வைத்து மட்டும் எடுக்க முடியாது. பெரும்பான்மை மாநிலங்களின் முடிவுகளுக்கு ஏற்பதான் முடிவு செய்ய முடியும்.

மக்களவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதற்காக எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கும் திட்டம் உள்ளது. அதிமுக நிச்சயம் ஒன்றிணையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.