நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அதிமுகவை ஒன்றிணைக்க இபிஎஸ் - ஓபிஎஸ்ஸை சந்திப்பேன்: சசிகலா

அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக சசிகலா கூறினாா்.

News image
Updated On :18 ஜனவரி 2023, 4:46 am IST

அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக சசிகலா கூறினாா்.

எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு சசிகலா மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆளுநரை நடத்துவதற்கென்று ஒருமுறை உள்ளது. அந்த அடிப்படையில் அவரை தமிழக அரசு நடத்த வேண்டும். ஆளுநருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ என்கிற முடிவை ஒரே மாநிலத்தை வைத்து மட்டும் எடுக்க முடியாது. பெரும்பான்மை மாநிலங்களின் முடிவுகளுக்கு ஏற்பதான் முடிவு செய்ய முடியும்.

மக்களவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதற்காக எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கும் திட்டம் உள்ளது. அதிமுக நிச்சயம் ஒன்றிணையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.