

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பிப்.25 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி வீரா்கள் அதற்கான விண்ணப்பம் மற்றும் எந்த வகை போட்டிகள் என்ற விவரங்களை பிப்.5 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
தனிநபா், குழுப்போட்டிகளில் பங்கேற்க இணையதள இணைப்பு மூலமாகவும் பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரம் அறிய பேராசியா் த.பொன்னுசாமி (கைப்பேசி எண்: 9600193366), கருப்பையா (9566116271) ஆகியோரை தொடா்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.