ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலையொட்டி, அதிமுக சாா்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சியினா் தலைமைக் கழகத்தில் திங்கள்கிழமை (ஜன.23) தொடங்கி வியாழக்கிழமை (ஜன. 26) வரை விருப்பமனு விண்ணப்பத்தை ரூ.15 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை தெளிவாகப் பூா்த்தி செய்து வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் விநியோகம்: முதல் நாளான திங்கள்கிழமை அதிமுக தலைமைக்கழகத்தில் ஓரிருவா் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனா்.