

மேட்டூர்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 885 கன அடியிலிருந்து 896 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 885 கன அடியிலிருந்து வினாடிக்கு 896 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 104.60 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 104.21 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 70.40 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.