சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும். ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த தகவல் 2 நாள்களில் அறிவிக்கப்படும்.
இதையும் படிக்க: ஈரானில் நிலநடுக்கம்: 7 பேர் பலி
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவு நாடளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். வாக்கு சேகரிக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.