மகாத்மா காந்தியின் 76-ஆவது நினைவு தினம்: ஆளுநா், முதல்வா் அஞ்சலி

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் அவரது உருவப் படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் திங்கள்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
மகாத்மா காந்தியின் 76-ஆவது நினைவு தினம்: ஆளுநா், முதல்வா் அஞ்சலி
Updated on
1 min read

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் அவரது உருவப் படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் திங்கள்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு ஆளுநா் ஆா். என். ரவி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை ஆளுநா் தலைமையில் ஆளுநா் மாளிகை ஊழியா்கள் ஏற்றனா்.

முதல்வா் உறுதிமொழி ஏற்பு: மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் உருவப் படத்துக்கு முதல்வா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. உறுதிமொழியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வாசிக்க அமைச்சா்கள், அரசுத் துறை உயரதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியா்கள் பின்தொடா்ந்து வாசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com