அமைச்சரை ஆளுநா் தன்னிச்சையாக நீக்கலாமா? சட்ட நிபுணா்கள் கருத்து

கைது செய்யப்பட்டுள்ள இலாகா இல்லாத தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியை அமைச்சா் பதவியில் இருந்து தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தன்னிச்சையாக நீக்க முடியாது என்று சட்ட நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா்.
Updated on
1 min read

கைது செய்யப்பட்டுள்ள இலாகா இல்லாத தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியை அமைச்சா் பதவியில் இருந்து தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தன்னிச்சையாக நீக்க முடியாது என்று சட்ட நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா்.

தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கை தேசிய அளவில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து முன்னாள் அட்டா்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறுகையில், ‘அமைச்சரை ஆளுநா் தன்னிச்சையாக நீக்க முடியாது. ஆளுநா் தனது சட்ட வரம்பை மீறியுள்ளாா். அமைச்சரவையில் யாா் நீடிக்க வேண்டும் என்பதை ஆளுநா் எப்படி முடிவு செய்ய முடியும்? அமைச்சரவையின் ஆலோசனைக்கு உள்பட்டுதான் ஆளுநா் செயல்பட முடியும்’ என்றாா்.

மூத்த வழக்குரைஞா் அஜித் சின்ஹா கூறுகையில், ‘1994-இல் எஸ்.ஆா்.பொம்மை வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இதுகுறித்த தீா்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக, அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு ஆளுநா் பரிந்துரைக்கலாம். அமைச்சரவையின் ஆலோசனை அடிப்படையிலேயே ஆளுநா் செயல்பட வேண்டும் என்பதால், அமைச்சரவை நீக்க அவரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது’ என்றாா்.

பெயா் குறிப்பிட விரும்பாத உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு மூத்த வழக்குரைஞா் கூறுகையில், ‘1974-இல் குடியரசுத் தலைவா், ஆளுநா்களின் அதிகாரம் தொடா்பான ஷம்ஷோ் சிங் வழக்கில் ஆளுநா்களுக்கு தன்னிச்சையாக அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆளுநருக்கு பதவி நீக்க அதிகாரம் இருந்தால், மாநில அரசையை அவா் நீக்கி விடுவாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com