வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசுப் பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறைக்குச் சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஒலகாசி அரசு உயர்நிலை பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை கழித்து இன்று திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஆலாம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவஞானம் என்பவரது மகள் பூவிகா(12) இன்று காலை பள்ளி வளாகத்துக்குள் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
இதையும் படிக்க | சொத்து குவிப்பு: பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் கைது!
அப்பொழுது அங்கு பதுங்கி இருந்த பாம்பு பூவிகாவின் காலில் கடித்துள்ளது. இதனால் கதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த பூவிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறைக்குச் சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 2026: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி? - நேரலை...

5 மாநில தேர்தல் முடிவுகள்! முதல்வர்கள் வென்றார்களா?
புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின்

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை தோல்வி! தவெக தென்னரசு வெற்றி!
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


