நெல்லையில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி

திருநெல்வேலியில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
நெல்லையில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலை அருகேயுள்ள அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சக்திவேல். இவருடைய மகள் பேச்சியம்மாள் என்ற சத்யா(6). இவா் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சக்திவேல் வீட்டு முன்பு ஓலை செட் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அதற்காக சாணம் எடுத்துக் கொடுத்த சத்யா, பின்னா் அருகில் உள்ள மாநகராட்சி மோட்டாா் பம்ப் அறை தண்ணீா் குழாயில் கையை கழுவ சென்றுள்ளாா். அப்போது மின்கசிவு காரணமாக திடீரென மின்சாரம் தாக்கி சத்யா உயிரிழந்தாா்.

இது தொடா்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com