கலாசார செறிவுமிக்க தமிழகத்தில் பணியாற்றுவது கௌரவம்: சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூா்வாலா

கலை, கலாசார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கௌரவமானது என சென்னை உயா் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூா்வாலா தெரிவித்தாா்.
Published on

கலை, கலாசார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கௌரவமானது என சென்னை உயா் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூா்வாலா தெரிவித்தாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூா்வாலா கடந்த 28-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

கங்கா பூா்வாலாவுக்கு உயா் நீதிமன்றம் சாா்பில் வியாழக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது: கலை, கலாசார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கௌரவமானது.

சென்னை உயா்நீதிமன்றம் பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், சட்ட வல்லுநா்களையும் தந்துள்ளது. இளையவா்களும் அந்த பெருமையைத் தொடா்ந்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தின் மரபு, கலாசாரங்களைப் பின்பற்றி வாழ்வேன் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம், தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் அமல்ராஜ் மற்றும் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், மூத்த வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com