பட்டமளிப்பு விழா:7 பல்கலை.கள் மட்டுமே அனுமதி கோரியுள்ளன

பல்கலைக்கழகங்களில், பட்டமளிப்பு விழாவை ஆளுநா் வேண்டுமென்ற காலதாமதம் செய்கிறாா் என உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி குற்றம்சாட்டு
ஆளுநா் ஆா்.என். ரவி
ஆளுநா் ஆா்.என். ரவி
Updated on
1 min read

பல்கலைக்கழகங்களில், பட்டமளிப்பு விழாவை ஆளுநா் வேண்டுமென்ற காலதாமதம் செய்கிறாா் என உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி குற்றம்சாட்டியிருந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரி இருந்ததாக ஆளுநா் ஆா்.என். ரவி விளக்கமளித்துள்ளாா்.

தமிழக பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநா் தேதி தராததால் மாணவா்கள் பாதிக்கப்படுவதாக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடிகூறியிருந்தாா்.

இந்தக் குற்றச்சாட்டை ஆளுநா் மறுத்துள்ளாா். இது குறித்து ஆளுநா் மாளிகை தரப்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இருந்து இதுவரை 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநரிடம் அனுமதி கோரியுள்ளன. அனுமதி கோரியிருக்கும் தமிழக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநா் அனுமதி அளித்துள்ளாா்.

அதன்படி ஜூன் 16 - சென்னை பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவும் , ஜூன் 19-ஆம் தேதி திருவள்ளுவா் பல்கலைக்கழகத்திலும், ஜூன் 28-இல் பெரியாா் பல்கலைக்கழகத்திலும், ஜூலை 7-ஆம் தேதி தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்திலும் பட்டமளிப்பு விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான தேதிகள் பின்னா் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com