சேலத்தில் பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்தனர்!

சேலத்தில் பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த சிகிச்சை பெற்று வந்த அனைவரும் உயிரிழந்ததை அடுத்து இறந்தர்களின் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது.
சேலத்தில் பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்தனர்!
Updated on
1 min read

சேலசேலத்தில் பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த சிகிச்சை பெற்று வந்த அனைவரும் உயிரிழந்ததை அடுத்து இறந்தர்களின் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது.

சேலம், இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை(ஜூன் 1) மாலை 4 மணி அளவில் பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

மேலும், வெடிவிபத்து காரணமாக கல்நாா் கூரை கட்டடம் முழுவதும் தரைமட்டமானது. விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேரும் படுகாயமடைந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

தகவலறிந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் சிராஜ் அல்வனிஷ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, வெடி விபத்தில் பட்டாசுக் கிடங்கு உரிமையாளா் கந்தசாமியின் மகன் சதீஷ்குமாா் (35), நடேசன் (50) மற்றும் பானுமதி (35) உள்ளிட்ட 3 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். 

மேலும் எம்.கொல்லப்பட்டியைச் சோ்ந்த ப.வசந்தா (45), வ.மோகனா (38), மணிமேகலை (36), வெ.மகேஸ்வரி (32), அ.பிரபாகரன் (31), மோ.பிருந்தா (28) ஆகிய 6 போ் படுகாயமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இதில் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வந்த அ.பிரபாகரன், வ.மோகனா, வெ.மகேஸ்வரி ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிமேலை (36) சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். பிருந்தா (28) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப.வசந்தா (45) ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து, பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அனைவரும் உயிரிழந்தனர்.

பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அனைவரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com