

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக நள்ளிரவு 2 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டார்.
காரில் செல்கையில் நெஞ்சுவலிப்பதாக நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவர் வேதனையை வெளிப்படுத்தியது அடுத்து உடனே அவர் சென்னை ஓமந்தூரார் பல்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவின் கீழ் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஒமந்தூரார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.