முகநூல் பக்கத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பதிவு: பாமக நிர்வாகிகள் இருவர் கைது

முகநூல் பக்கத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்ட பாமக நிர்வாகிகள் 2 பேரை காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 
முகநூல் பக்கத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பதிவு: பாமக நிர்வாகிகள் இருவர் கைது
Updated on
1 min read


காஞ்சிபுரம்: முகநூல் பக்கத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்ட பாமக நிர்வாகிகள் 2 பேரை காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி மறைந்த ஸ்ரீதரை போலீசார் தேடி வந்த கால கட்டத்தில், அவர் தனது குழுவில் உள்ள வேறு யார் மீதாவது கை வைத்தால் அடுத்த 15 நிமிடங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படும் என அப்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் மறைந்த ஸ்ரீதர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்களான இருவர், சமூக வலைத்தளங்களில் ஸ்ரீதரின் படத்துடன் காவல் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கும் அறிவிப்பினை தங்களுடைய முகநூல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் சமூக வலைதளங்களில் ரௌடி ஸ்ரீதர் குறித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட பாமக நிர்வாகிகளான உழகோல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (29), மற்றும் அவருக்கு முகநூல் பக்கத்தில் வெளியிட உதவிய கிதிரிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித் (20) ஆகிய 2 பேர் மீது காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com