ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சாலைவரி உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் - அன்புமணி

இருசக்கர வாகனங்கள், கார்களுக்கான  சாலைவரியை ரூ.1000 கோடியாக உயர்த்தும் மாநில அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

News image

அன்புமணி

Updated On :19 ஜூன் 2023, 3:54 pm IST

இருசக்கர வாகனங்கள், கார்களுக்கான  சாலைவரியை ரூ.1000 கோடியாக உயர்த்தும் மாநில அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதை குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில்,  "தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கான சாலை வரியை,  தற்போதுள்ள 8 சதவிகிதத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை விலையுள்ள வாகனங்களுக்கு 10 சதவிகிதமாகவும்,  அதற்கு கூடுதலான விலை கொண்ட வாகனங்களுக்கு 12 சதவிகிதமாகவும் உயர்த்த தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. 

இதைபோல், மகிழுந்துகளுக்கான  சாலை வரி,  5 லட்சம் வரையுள்ள வாகனங்களுக்கு 12 சதவிகிதமாகவும் 5 முதல் 10 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கான வரி 10 லிருந்து, 13 சதவிகிதமாகவும், 10 முதல் 20 லட்சத்துக்குட்பட்ட  வாகனங்களுக்கு 15 சதவிகிதமாகவும் அதற்கும் மேற்பட்ட விலையுள்ள வாகனங்களுக்கு 20 சதவிகிதமாகவும் உயர்த்தப்படவுள்ளது. 

சராசரியாக 5% அளவுக்கு விலை உயர்வு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட இந்த சாலை வரிகளின் மூலமான தமிழக அரசின் ஆண்டு வருவாய் இப்போதுள்ள ரூ.6674 கோடியிலிருந்து ரூ.1000 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சாலை வரி உயர்வால் இரு சக்கர வாகனங்களுக்குகான  விலை ரூ.16 ஆயிரம் வரையிலும், மகிழுந்துகளின் விலை லட்சக்கணக்கிலும் உயரும் அபாயம் உள்ளது. இது நியாயமானதல்ல. இந்த வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே இரு சக்கர வாகனங்களை தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மிக அதிக தொகை வசூலிக்கப்படும் நிலையில், சாலை வரிகள் ரத்து செய்யப்பட வேண்டுமே தவிர, உயர்த்தப்படக்கூடாது.

வாகனவரி வருவாய் இயல்பாகவே ஆண்டுக்கு 10% அதிகரித்து வரும் நிலையில், அதை உயர்த்த வேண்டிய தேவை இல்லை. எனவே, வாகனங்களுக்கான சாலைவரியை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.