மணப்பாறை அருகே அரசுப் பேருந்து-கார் மோதல்: 5 பேர் பலி

மணப்பாறை அருகே கல்கொத்தனூரில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்டதில் 5 பேர் பலியாகினர்.
மணப்பாறை அருகே அரசுப் பேருந்து-கார் மோதல்: 5 பேர் பலி
Updated on
1 min read

மணப்பாறை அருகே கல்கொத்தனூரில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்டதில் 5 பேர் பலியாகினர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்கொத்தனூர் என்ற திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அரசுப் பேருந்து மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.

இதில் 5 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com