காலை சிற்றுண்டி திட்டம்: உணவு பட்டியல் மாற்றியமைப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் சாா்பில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 5 வரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவைகளில் சிறுதானிய உணவுகளை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சமூகநலத்துறை முதன்மைச்செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாரத்தில் 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானிய உணவுகளை வழங்க வேண்டும். உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவைகளில் சிறுதானிய உணவுகளை சேர்த்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

குறிப்பாக அரிசி, கோதுமை, ரவா, சேமியா, சிறுதானியம், பருப்பு, காய்கறி ஆகியவை அடங்கிய உணவு வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com