போலி கடவுச்சீட்டு: ஏடிஜிபி டேவிட்சன் மீதான புகாரை விசாரிக்க உத்தரவு!

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான போலி கடவுச்சீட்டு புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டேவிட்சன் தேவாசீா்வாதம்
டேவிட்சன் தேவாசீா்வாதம்
Published on
Updated on
1 min read

சென்னை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான போலி கடவுச்சீட்டு புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது, போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக கடந்தாண்டு புகார் எழுந்தது.

இந்த சம்பவத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்தில் வராகி என்பவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் டேவிட்சன் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், உளவுத்துறை ஏடிஜிபி பதவியில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தமிழக காவல்துறை தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டு நேற்று உத்தரவிடப்பட்டது.

மேலும், போலி கடவுச்சீட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் டேவிட்சனிடமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com