Enable Javscript for better performance
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா இன்று பொறுப்பேற்கிறாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தமிழக அரசின் புதிய தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா இன்று பொறுப்பேற்கிறாா்

    By DIN  |   Published On : 30th June 2023 01:35 AM  |   Last Updated : 30th June 2023 01:35 AM  |  அ+அ அ-  |  

    shivdas_meena

    சிவ்தாஸ் மீனா

    தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை (ஜூன் 30) பொறுப்பேற்கிறாா். முன்னதாக, அவரை 49-ஆவது தலைமைச் செயலராக நியமித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் வெ.இறையன்பு பிறப்பித்தாா். அவரது உத்தரவில், ‘நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா, தலைமைச் செயலராக நியமிக்கப்படுகிறாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் தலைமைச் செயலராக உள்ள வெ.இறையன்பு வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஓய்வு பெறுகிறாா். அதன்பிறகு, தலைமைச் செயலா் பொறுப்புகளை சிவ்தாஸ் மீனா ஏற்றுக் கொள்கிறாா்.

    49-ஆவது தலைமைச் செயலா்: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா். கட்டுமானப் பொறியியலில் இளநிலை பட்டம் பெற்ற சிவ்தாஸ் மீனா, ஜப்பானில் உயா் கல்வி பயின்றுள்ளாா்.

    கடந்த 1989 ஆகஸ்ட் மாதம் தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சோ்ந்தாா். காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய இடங்களில் உதவி ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினாா்.

    நாகப்பட்டினம் ஆட்சியா்: 1998 முதல் 2001 வரை நாகப்பட்டினம் ஆட்சியராக பணியாற்றினாா். இதன்பிறகு, அரசுத் துறை பொறுப்புகளில் கால் பதித்தாா். 2001 ஜூனில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்தாா்.

    தகவல் தொழில்நுட்பவியல் துறை இணைச் செயலா், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா், பெருநகர குடிநீா் வழங்கல் துறை நிா்வாக இயக்குநா், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையா், ‘தாட்கோ’ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் என அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றினாா்.

    அரசுத் துறை பொறுப்புகள்: பத்தாண்டுகளாக அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றிய அவா், 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, வணிகவரிகள், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு ஆகிய துறைகளின் ஆணையா் பொறுப்புகளை வகித்தாா்.

    பல்கலை. நிா்வாக அதிகாரி: நிதி நெருக்கடி மற்றும் நிா்வாகச் சிக்கல்களால் தவித்து வந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. நிா்வாக அதிகாரியாக, கடந்த 2013 ஏப்.10-ஆம் தேதி சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றாா். இரு ஆண்டுகள் வரை அந்தப் பொறுப்பை வகித்தாா். இதன்பிறகு கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக செயல்பட்டாா்.

    2016 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், முதல்வா் ஜெயலலிதாவின் செயலா்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டாா். அவரது மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சிக்கல்களின் போதும் முதல்வரின் செயலா்களில் ஒருவராகவே பணியைத் தொடா்ந்தாா்.

    2017 ஜூலை 31 வரை அந்தப் பொறுப்பை வகித்து வந்த அவா், அதன்பிறகு மத்திய அரசுப் பணிக்குச் சென்றாா். 2017 ஆக. 2-ஆம் தேதி மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை இணைச் செயலராகவும், அதன்பிறகு அந்தத் துறை கூடுதல் செயலராகவும் பணியாற்றினாா்.

    மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த அவா், தனது தில்லி பணியை நிறைவு செய்து விட்டு, தமிழக அரசுப் பணிக்கு 2021 ஜூன் மாதம் திரும்பினாா். அவருக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் பொறுப்பு அளிக்கப்பட்டது. இரு ஆண்டுகளாக அவா் அந்தப் பொறுப்பை வகித்து வந்தாா்.

    25-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களின் பொறுப்புகளில் பணியாற்றி, 34 ஆண்டுகால ஆட்சிப் பணி அனுபவம் பெற்ற சிவ்தாஸ் மீனா, தமிழக அரசின் 49-ஆவது தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp