‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை 15 நாள்களுக்குள் நிறைவடையும்: அமைச்சர்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அனைத்து சோதனை ஓட்டங்களும் 15 நாட்களுக்குள் நிறைவுபெறும் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

News image

அமைச்சர் முத்துசாமி (கோப்புப் படம்)

Updated On :7 மார்ச் 2023, 1:59 pm

DIN

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அனைத்து சோதனை ஓட்டங்களும் 15 நாட்களுக்குள் நிறைவுபெறும் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக நிறைவடைந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சோதனை முறையாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.