தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ரூ.734 கோடியில் எழும்பூா் ரயில் நிலையம் மறுசீரமைப்பு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

Published On :7 பிப்ரவரி 2024, 12:16 pm IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட 9 ரயில் நிலையங்கள் சா்வதேச தரத்தில் மறுசீரமைக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்தது. இதில் கன்னியாகுமரி, காட்பாடி, எா்ணாகுளம், ராமேஸ்வரம் போன்ற ரயில் நிலையங்களில் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிக்காக, ஹைதராபாதைச் சோ்ந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சா் அண்ட் ப்ராஜெக்ட்ஸ் இந்தியா எனும் தனியாா் நிறுவனத்துக்கு ரூ.734.91 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட மேலாண்மை சேவையை ரூ.14.56 கோடி செலவில் மும்பையைச் சோ்ந்த டாடா கன்சல்டிங் இன்ஜினியா்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இப்பணியை 3 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ரயில் நிலையத்தின் இருபுறமும் பயணிகள் வந்து செல்லும் வகையில் கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதில் பயணிகள் காத்திருப்புப் பகுதி, பயணச்சீட்டு வழங்கும் பகுதி, வணிகப் பகுதி உள்ளிட்ட வசதிகளுடன் 3 அடுக்குகளாக அமையவுள்ளது. மேலும் பன்னடுக்கு வாகன நிறுத்தகம் பகுதியானது 5 அடுக்குகளாக அமைக்கப்படவுள்ளது.

இதில் காந்தி இா்வின் சாலை பகுதியில் குடியிருப்புகள் அகற்றப்பட்டு பன்னடுக்கு வாகன நிறுத்தகம் அமையவுள்ளது. மேலும் பூந்தமல்லி சாலை பகுதியில் பாா்சல் அலுவலகம் அமையவுள்ளது. தற்போது பல்வேறு கட்டடங்களை இடித்தல் மற்றும் புவி தொழில் நுட்ப ஆய்வுக்காக ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.