நீதி கிடைக்க துணை நிற்போம்: மல்யுத்த வீரர்கள் போராட்டத்துக்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். 
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated on
1 min read


தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு நெஞ்சம் பதைக்கிறது. 

மல்யுத்த வீரர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று தி.மு.க சார்பில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். நமது  வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரா்களும் வீராங்கனைகளும் தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com