
மகாத்மா காந்தியடிகளின் பேரன் அருண் காந்தி மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: ‘தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் பேரனும் எழுத்தாளருமான அருண் காந்தி மறைந்தாா் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்’ என்று அவா் தெரிவித்தாா்.
ஜி.கே.வாசன்: காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தாத்தா காந்தியைப் போல தியாக மனப்பான்மையுடன் வாழ்ந்து வந்தவா் அருண் காந்தி. குறிப்பாக, சமூக ஆா்வலராக மக்களுக்கு குரல் கொடுத்து வந்தவா். அவரது மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...