நியாயவிலைக் கடைகளில் பணம் இல்லையென்றாலும் பொருள்கள் வாங்கலாம்

நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பணம் இல்லையென்றாலும் பொருள்கள் வாங்கலாம்

நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் முதல்முறையாக 602  நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள், பொருள்களைப் பெற பணமில்லா பரிமாற்ற பரிவர்த்தனை ( க்யூஆர் கோடு ) நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பணப்பரிமாற்றத்தைக் குறைத்து, எண்ம முறையில் பரிமாற்றத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக, தமிழகத்தில் முதல் முறையாக நியாயவிலைக் கடைகளில் க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, நடைபாதை கடை முதல் மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரை மின்னணு பண பரிவர்த்தனையே நடைபெற்று வருகிறது. இதனால், எப்போதும் கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.

இந்த வசதியை கூட்டுறவு துறை நியாய விலைக் கடைகளுக்கும் கொண்டு வர முடிவு செய்து, அதனை முதல் கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

அதன்படி, தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்கள் வாங்கும் பொருள்களுக்கு பணம் மாற்றம் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் க்யூஆர் கோட் முறையினை கூட்டுறவு சங்கங்களை பதிவாளர் சண்முகசுந்தரம் காஞ்சிபுரம் எம்.வி.எம்.பி. நகரில் அமைந்துள்ள நியாய விலை கடையில் துவக்கி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com