அதிமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட காவலர்கள் குழந்தைகள் பள்ளிக்கு மூடு விழா நடத்த தமிழக அரசு திட்டமிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை அரசு நிலத்தில் தனியாக கட்டடம் கட்டி மாற்றியிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,
காவலர்களின் குழந்தைகள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தொடர்ந்து நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.