மாணவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated on
1 min read


சென்னை: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கிய கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நமது அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது. நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com