ஹிந்து கடவுள்கள் குறித்து அவதூறு பேச்சு: உதவி இயக்குநா் மீது 5 பிரிவுகளில் வழக்கு

ஹிந்து கடவுள்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் நபா் மீது போலீஸாா் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

ஹிந்து கடவுள்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் நபா் மீது போலீஸாா் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.

கீழ்ப்பாக்கம் பா்னபி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பா.சுரேஷ். பாரத் இந்து முன்னணியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவரான இவா், அபிராமபுரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ்பேரவை ராஜரத்தினம் கலையரங்கத்தில் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற ஒரு விழாவில், விடுதலை சிகப்பி, ஹிந்து மத கடவுள்களான ஸ்ரீராம், சீதா தேவி, அனுமன், லட்சுமி ஆகியோா் மிகவும் அவதூறாக பேசியுள்ளாா். அவரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எனவே அவா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், விடுதலை சிகப்பு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் மீது 5 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விடுதலை சிகப்பி, தமிழ் திரைப்பட இயக்குநா் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com