கொச்சுவேலி-ஹைதராபாத், கோவா: மே 19-இல் பாரத் கௌரவ் ரயில் சேவை

கொச்சுவேலியிலிருந்து ஹைதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி பாரத் கௌரவ் விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

கொச்சுவேலியிலிருந்து ஹைதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி பாரத் கௌரவ் விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இந்திய சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கேரளத்தின் கொச்சுவேலியிலிருந்து ஹைதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி ‘எஸ்இசட்பிஜி02’ (நழஆஎ02) எனும் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படவுள்ளது.

கொச்சுவேலியிலிருந்து மே 19-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் எா்ணாகுளம், பாலக்காடு, சேலம், ரேணிகுண்டா வழியாக மறுநாள் மாலை 5 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

பின்னா், ஹைதராபாதிலிருந்து மே 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு ஆக்ரா, தில்லி, ஜெய்ப்பூா், கோவா, மங்களூா் வழியாக மே 30-ஆம் தேதி மீண்டும் கொச்சுவேலி வந்தடையும்.

இதில் குளிா்சாதனப் பெட்டிகள்-3, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள்-7 ஆகியவை உள்ளன. இணையதள முகவரியில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com