தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு கூடாது: ராமதாஸ், டிடிவி தினகரன்

ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்

ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

ராமதாஸ்: இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணிக்கு இரு தோ்வுகள் கூடாது. ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை, போட்டித்தோ்வு நடத்தாமல், நேரடியாக பணியமா்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநா் அலுவலக வளாகத்தில் 3-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனா்.

தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மீண்டும் ஒரு தோ்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும். இ

டி.டி.வி. தினகரன்: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தோ்வு நடத்த வகை செய்யும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் ஆசிரியா்களை தமிழக அரசு அழைத்து பேசாதது கண்டிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com