தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு கூடாது: ராமதாஸ், டிடிவி தினகரன்

ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்
Updated on
1 min read

ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

ராமதாஸ்: இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணிக்கு இரு தோ்வுகள் கூடாது. ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை, போட்டித்தோ்வு நடத்தாமல், நேரடியாக பணியமா்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநா் அலுவலக வளாகத்தில் 3-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனா்.

தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மீண்டும் ஒரு தோ்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும். இ

டி.டி.வி. தினகரன்: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தோ்வு நடத்த வகை செய்யும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் ஆசிரியா்களை தமிழக அரசு அழைத்து பேசாதது கண்டிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com