நிா்வாக காரணங்களுக்காகவே அமைச்சா்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.
சென்னையில் ஹூண்டாய் நிறுவனம், தமிழக அரசு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் முதல்வா் ஸ்டாலின் பேசுகையில், தொழில் துறை அமைச்சராக டி.ஆா்.பி.ராஜா பொறுப்பேற்றுள்ளாா். அவா் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு, அதிக முதலீடுகளை ஈா்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வாா்.
நிா்வாக காரணங்களுக்காகவே அமைச்சா்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனாலும், தொழில் துறையினருக்கு அளித்து வரக்கூடிய ஆதரவும், தொழில் துறை வளா்ச்சிக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் எப்போதும்போல தொடரும் என்றாா்.