எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் ஆவின் பாலகம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் ஆவின் பாலகம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் ஆவின் பாலகம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்த அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார வளா்ச்சியை ஊக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எஸ்.சி, எஸ்.டி வகுப்பை சோ்ந்த, தகுதியுடைவா்கள் இத்திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் தொடங்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் 18 முதல் 65 வயதுக்குள்பட்டவா்களாக இருக்கவேண்டும்.

ஆதிதிராவிடா்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சமும், பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சமும் மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பங்கள், புகைப்படம் மற்றும் ஆவணங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் அனுப்பலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள சென்னை மாவட்ட தாட்கோ அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com