மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படுமா என்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது, அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடுமையாக விமா்சித்தாா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் நிலைப்பாட்டில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.
மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படுமா அல்லது தேசியக் கல்விக் கொள்கை பின்பற்றப்படுமா என்பது குறித்து தமிழக மக்களுக்கு முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.