கள்ளச்சாராயம் ஒழிக்க தொடர் நடவடிக்கை தேவை: மநீம வலியுறுத்தல்

கள்ளச்சாராயம் ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். 
கள்ளச்சாராயம் ஒழிக்க தொடர் நடவடிக்கை தேவை: மநீம வலியுறுத்தல்
Updated on
1 min read

கள்ளச்சாராயம் ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துவிட்டு எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல.

இதுபோன்ற  கோரசம்பவங்கள் நடந்தவுடன், தீவிர நடவடிக்கை எடுப்பதும், பின் அலட்சியமாக இருப்பதும் பலநேரங்களில் நடந்திருப்பதை நாம் அறிவோம். இப்போது அப்படியில்லாமல் தமிழ்நாடு காவல்துறை, கள்ளச்சாராயம் தயாரிப்போர், விற்பனை செய்வோர், விற்பனைக்குத் துணை போவோர் உள்ளிட்ட அனைவர் மீதும் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்க வேண்டும். கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டுமென  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com