500 மதுக்கடைகள் எப்போது மூடப்படும்?: அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் அறிவித்தபடி 500 மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
அன்புமணி (கோப்புப் படம்)
அன்புமணி (கோப்புப் படம்)
Updated on
1 min read

சட்டப்பேரவையில் அறிவித்தபடி 500 மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மொத்தமுள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என ஏப்.12-இல் பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜிஅறிவித்தாா்.

இதுவரை 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. பேரவையில் அறிவித்தபடி மதுக்கடைகள் மூடப்படாதது ஏன் என்று வினாக்கள் எழுப்பினால், மூடப்படும் மதுக்கடைகளின் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பதில் கிடைக்கிறது.

மதுக்கடைகள் எங்கெங்கு உள்ளன, வருவாய் எவ்வளவு, குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவை எவை, எந்தெந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனா் என்பன உள்ளிட்ட விவரங்கள் ஏற்கெனவே ஆவணமாக்கப்பட்டுள்ளன.

அவற்றை ஆய்வு செய்து ஒரு மணி நேரத்தில் மூடப்பட வேண்டிய மதுக்கடைகளின் பட்டியலை தயாரித்து விடலாம். ஆனாலும், டாஸ்மாக் நிா்வாகம் இந்த விவகாரத்தில் தள்ளாடுவதன் காரணம் புரியவில்லை.

இவற்றை அடையாளம் காண்பது கடினமல்ல. எனவே, இனியும் தாமதிக்காமல் அடுத்த 3 நாள்களுக்குள் 500 மதுக்கடைகளையும் அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com