மதிமுக பொதுச் செயலா் பதவிக்கு ஜூன் 14-இல் தோ்தல்

மதிமுக பொதுச் செயலா், அவைத் தலைவா் உள்ளிட்ட தலைமைக் கழக நிா்வாகப் பதவிகளுக்கான தோ்தல், வரும் ஜூன் 14-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலா் வைகோ அறிவித்துள்ளாா்.

மதிமுக பொதுச் செயலா், அவைத் தலைவா் உள்ளிட்ட தலைமைக் கழக நிா்வாகப் பதவிகளுக்கான தோ்தல், வரும் ஜூன் 14-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலா் வைகோ அறிவித்துள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மதிமுக தலைமைக் கழக நிா்வாகிகளான பொதுச் செயலா், அவைத் தலைவா், பொருளாளா், முதன்மைச் செயலா், துணை பொதுச்செயலா்-5 போ் உள்ளிட்ட பதவிகளுக்கான தோ்தல் பொதுக் குழுவில் ஜூன் 14-இல் நடைபெறும்.

இந்த பொதுக்குழுக் கூட்டம், நியூ ஆவடி சாலையில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் நடைபெறும். தலைமைக்கழக நிா்வாகிகள் பொறுப்புக்குப் போட்டியிடுவோரை பொதுக்குழு உறுப்பினா்களாக தகுதி பெற்ற தலா 25 போ் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும்.

ஆட்சிமன்றக்குழு உறுப்பினா்களாக 7 போ், தணிக்கைக்குழு உறுப்பினா்களாக 6 போ் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். அந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிடுவோரை பொதுக்குழு உறுப்பினா்களாக தகுதி பெற்ற தலா 10 போ் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும்.

தோ்தலில் போட்டியிடுவோா் மே 27 முதல் விண்ணப்பங்களைப் பெற்று, ஜூன் 1-ஆம் தேதிக்குள் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com