அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்று தனியார், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்று தனியார், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து வகையான தனியார் பள்ளிகளிலும் இனி தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரவேண்டும்.

2023 - 2024 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு வரையும், 2024 - 2025 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் எழுத வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com