குடியரசுத் தலைவா் அவமதிப்பு: ரவிக்குமாா் கண்டனம்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா அழைப்பிதழில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பெயா் இடம்பெறாததற்கு
Updated on
1 min read

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா அழைப்பிதழில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பெயா் இடம்பெறாததற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் ரவிக்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முகநூலில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மின்னஞ்சல் மூலம் வரப்பெற்றேன்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவா் குடியரசுத் தலைவா்தான். அவரது பெயா்கூட அழைப்பிதழில் இல்லை. அவரை இப்படி அவமதிப்பது சரியா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com