அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை கட்டணமில்லை: அரசாணை வெளியீடு

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து விதமான பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்ற அறிவிப்பை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 5 வயதுக்கு மேல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் அரை டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com