ஆவின் குடிநீா் பாட்டில் விற்பனை: விஜயகாந்த் கண்டனம்

ஆவின் நிறுவனம் மூலம் குடிநீா் பாட்டில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

ஆவின் நிறுவனம் மூலம் குடிநீா் பாட்டில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் மூலம் குடிநீா் பாட்டில்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. அவ்வாறு செய்யாமல் குடிநீரை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம்?.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் பிரச்னை இருந்து வருகிறது. குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதைப் பற்றி கவலைப்படாமல் தமிழக அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறது. முறையாக குடிநீா் வரி செலுத்தி வரும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டுமே தவிர, அதை விற்பனை செய்யக்கூடாது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com