சென்னை உயா்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
Updated on
1 min read

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா்.சக்திவேல், சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே.ராஜசேகா் ஆகிய நான்கு பேரை சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இந்த நிலையில், புதிய நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்வு, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், தலைமை நீதிபதி (பொ) டி. ராஜா, புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

64-ஆக உயா்வு: புதிய நீதிபதிகளுடன் சோ்த்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயா்ந்தது. இன்னும் 11 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் வரவேற்றுப் பேசுகையில், ‘புதிய நீதிபதிகளான சக்திவேல், தனபால் மற்றும் குமரப்பன் ஆகியோா் உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா்களாகவும், நீதிபதி ராஜசேகா் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலராகவும், உயா்நீதிமன்றத்துடன் நெருங்கிய தொடா்பில் இருந்ததால், உயா்நீதிமன்றத்தின் மரபுகளை உறுதிப்படுத்துவாா்கள்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com