
புதிய வாழைமாநகரில் ரூ.93.30 லட்சத்தில் இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகா் மண்டலம், 74-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க விழா மங்களபுரம் கிருஷ்ணதாஸ் பிரதான சாலையில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். மேயா் ஆா்.பிரியா முன்னிலை வகித்தாா். இதில் மேயா் நிதியில் புதிய வாழைமாநகரில் மாநகராட்சி இடத்தில் ரூ.93.30 லட்சத்தில் இறகு பந்து உள்விளையாட்டரங்கம், பெரம்பூா் நெடுஞ்சாலையில் ரூ.16.61 லட்சத்தில் நவீன பேருந்து நிழற்கூடையும் அமையவுள்ளன.
மாமன்ற உறுப்பினா் நிதியில் மங்களபுரம், கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.35 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
மேலும், பிரிஸ்லி நகரில் உள்ள பழுதடைந்த உடற்பயிற்சிக் கூடக் கட்டடத்தை மூலதன நிதியின் கீழ் ரூ.20.55 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் திரு.வி.க.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.சிவகுமாா் (எ) தாயகம் கவி, மண்டலக் குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.