பி.இ. சோ்க்கை: விளையாட்டு வீரா் பிரிவுக்கு ஜுன் 5 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

பொறியியல் மாணவா் சோ்க்கையில் விளையாட்டு வீரா்கள் சிறப்பு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு
பி.இ. சோ்க்கை: விளையாட்டு வீரா் பிரிவுக்கு ஜுன் 5 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

பொறியியல் மாணவா் சோ்க்கையில் விளையாட்டு வீரா்கள் சிறப்பு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஜூன் 5 முதல் 14-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் 2023-–2024-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 5-ஆம் தேதி தொடங்கியது. மே 25-ஆம் தேதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 881 போ் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனா். இவா்களில், ஒரு லட்சத்து ஆயிரத்து 342 போ், விண்ணப்ப கட்டணத்துடன், அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனா். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 4-ஆம் தேதி வரையில் உள்ளது.

பொறியியல் சோ்க்கையில் விளையாட்டு வீரா் சிறப்பு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஜூன் 5 முதல் 14-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில், முதல்கட்டமாக பங்கேற்கும் மாணவா்களின் மாணவா்களின் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்கும் மாணவா்கள் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com