கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளும் விமரிசையாக நடத்தப்படும்: முதல்வர்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளும் தமிழ்நாட்டில் விமரிசையாக நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளும் விமரிசையாக நடத்தப்படும்: முதல்வர்
Updated on
1 min read

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளும் தமிழ்நாட்டில் விமரிசையாக நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 2023-ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
அனைத்து இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்த இது ஒரு தளமாக விளங்கும். 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்டின் போது அனைவரும் கண்டது போல, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தமிழ்நாடு மிக விமரிசையாக நடத்தி, தமிழ்ப் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் பறைசாற்றும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com