கோப்புப் படம்
கோப்புப் படம்

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 8 பேர் கைது

வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியதாக கரூரில் திமுகவினர் 8 பேரை  காவல் துறையினர் சனிக்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.
Published on

கரூர்: வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியதாக கரூரில் திமுகவினர் 8 பேரை  காவல் துறையினர் சனிக்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு உள்பட பத்து இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக சோதனை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி ராமகிருஷ்ணபுரத்தில் வசிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரி சோதனை இட சென்றபோது அவரை திமுகவினர் தாக்கியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து  அதிகாரிகள்  அளித்த புகாரின்  பேரில் கரூரில் திமுகவை சேர்ந்த அருண், ஷாஜகான் உள்பட எட்டு பேரை சனிக்கிழமை நள்ளிரவில் கரூர் நகர காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com