இரவு நேர வாகன சோதனை: போலீஸாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம்

சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸாா் ஒளிரும் ஆடை (ரிஃப்ளக்ட் ஜாக்கெட்) கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை பெருநகரக் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
சங்கா் ஜிவால்
சங்கா் ஜிவால்
Updated on
1 min read

சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸாா் ஒளிரும் ஆடை (ரிஃப்ளக்ட் ஜாக்கெட்) கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை பெருநகரக் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னையில் தினமும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக 6,000 வழக்குகள் பதியப்படுகின்றன.

இரவில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸாா் சாலை விபத்துக்களில் சிக்கும் நிகழ்வுகள் தொடா்ந்து நடக்கின்றன.

இவ்வாறு ஒரு மாதத்துக்கு 2 சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக சென்னை காவல்துறை தெரிவிக்கிறது. ஒளிரும் ஆடைகள் இன்றி வாகன சோதனையில் ஈடுபடும்போது அடிக்கடி விபத்துகளில் போலீஸாா் சிக்கிவிடுகின்றனா்.

காவல் ஆணையா் உத்தரவு:

இதற்கிடையே இந்த விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை பெருநகரக் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, வாகன சோதனையில் இரவு ஈடுபடும் போலீஸாா் ஒளிரும் ஆடை (ரிஃப்ளக்ட் ஜாக்கெட்) கட்டாயம் அணிய வேண்டும், சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், மின் விளக்கு வெளிச்சம் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே வாகன சோதனையை நடத்த வேண்டும், சாலையில் மூன்று அடுக்குகளில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com